×

நல்லாத்தூர் கிராமத்தில் 2 டிரான்ஸ்பார்மர்கள் அமைப்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லாத்தூர் கிராமத்துக்கு பலவருடங்களாக சீரான மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் சிரமப்பட்டு வந்தனர்.  இந்நிலையில், ஊராட்சி தலைவர் தலைமையில் கிராமமக்கள் சார்பில், எஸ்.சந்திரன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனுகொடுத்தனர். இதையடுத்து உடனடியாக மின்சார வாரியத்துக்கு தொடர்புகொண்டு பேசிய எம்எல்ஏ, நல்லாத்தூர் கிராமத்தில் மின்சார பிரச்னையை தீர்த்துவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன் நல்லாத்தூர் கிராமத்தில் புதிதாக 2 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டது. இதை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கூளூர் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சந்தான மகாராஜன், உதவி கோட்ட செயற்பொறியாளர் (ஊரகம்) கோட்டீஸ்வரி, உதவி பொறியாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊராட்சி தலைவர் கலையரசி கமலநாதன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்.சந்திரன் எம்எல்ஏ, இரண்டு புதிய டிரான்ஸ்பார்மரை இயக்கிவைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். விழாவில், காஞ்சிப்பாடி சரவணன், திலகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nallathur , Nallathur, Transformers, Organization
× RELATED கல்பாக்கம் அருகே தாழ்வாக செல்லும்...